Wednesday, July 06, 2005

யார் அறிவார்....?

எனக்குரியவளாய்
எனக்குத் தெரிபவளே!
ஏன்.......
ஏமாற்றங்களை மட்டும்
எனதாக்குகிறாய்
எப்போதும்
உன்நினைவில் தான்
என்னிதயம் இயங்குகிறது
ஏக்கங்களும்
ஏமாற்றங்களும்
என் சொத்தாகி விட்டது
ஏனிப்படி
எனக்குமட்டும் .....-என்
சுவாசக்காற்று தினம்
உன் பெயரை சொல்லியே
என்னிதயத்தை தழுவுகிறது
எங்கும் எதிலும்
உன்நினைவு.........-என்
ஞாபகசக்தியை கூட
குறைக்கிறது.......
என்ன நடந்தது எனக்கு?
இது உன்னால் வந்தது
உன் மேல் நான் கொண்ட
காதலால் வந்தது
காத்திருப்பு தான் காதலுக்கு
இனிமையேன்றார்
காத்திருப்பே!-என்
வாழ்வாகிடுமா?
ஏக்கங்கங்கள்....
ஏமாற்றங்கள்....
தவிப்புக்கள்...
இவற்றுடன் இப்போ!
மெல்ல மெல்ல என்னுள்
அச்சத்தின் அடையாளமும்
தெரிகிறது - அதனால்
எழும் சோகத்தால்
வரும் என் அழுகையை....
யார் அறிவார்....?

Monday, July 04, 2005

சொல்லியதா?

பல நாட்கள் காதிருந்தேன்!
களவாடாலாம் என
திருடினேன் உன்
இதயத்தை.....
ஆனால் நல்ல நண்பியாய்!
அமைதியாகியது மனம்
ஆறுதலடைந்தது உள்ளம்
மறுபடியும் மறுபடியும்
என் உள்ளம் எனக்குள்
ஏதோ சொல்லியது!
என்ன உற்றுக் கேட்டேன்!
நீ என் நண்பி மட்டுமே என்றது
அமைதியான
மனமிங்குஆர்பரிக்கிறது....
அங்கலாய்க்கிறது....
பள்ளியில் நண்பியான நீ
வாழ்க்கையில்....
நல்லநண்பியாக - என்
வாழ்க்கை துணைவியாக
வரும் நாளை எண்ணி.!
எப்போது அந்நத காலம்
என்னை சேரும்!
என்னுள்ளம் சொல்லியது
உனக்கு அவள் தான் -ஆனால்
உன் உள்ளம்
உனக்கு நான் என சொல்லியதா?

நிலையாய் வரும் கவிதைகள்!

உன் அமைதியில்.....
என்னுள்ளம் சாகிறது...
இத்தோடு நிறுத்தி விடு
என் மனதுக்குள் தினந்தோறும்
எத்தனை போராட்டம்!
நினைவுதான் என்
நிஜ வாழ்வாகுமா?-இல்லை
நீ எந்தன் வாழ்வில்
ஓளியாகுவாயா?
புரியவில்லை...
எதுவுமே புரியவில்லை
கதிரைகளுக்கும்..
மேசைகளுக்கும்..
நடக்கும் சக்கிதியிருந்தால்...?
என்ன செய்யுமோ!
அதை தான் நான் செய்கிறேன்
காரணம் காதல்....
ஆம்-நான்
உன் மேல் கொண்ட காதல்
நிசப்பதமான இரவுகளில்
நித்திரையற்ற வேளையில்
நினைவுகள் உன் பக்கம்
நிறுத்த முடியாத
உன் நினைவுடனே!
நிலையாய் வரும்
கவிதைகள்......!